Showing posts with label விலை பேசப் பட்டவர்கள். Show all posts
Showing posts with label விலை பேசப் பட்டவர்கள். Show all posts

Thursday, November 13, 2008

முதல் கிறுக்கல்...



முன் இரவு...
முதன் முதலாய் எழுத உட்கார்ந்தேன்
எதை பற்றி எழுதுவேன்
என்ன வென்று எழுதுவேன்
யோசித்து கிறுக்கியதில் உங்கள் பார்வைக்கு சில...

"என்னை போல அயல் நாட்டிலே வாழும் சகோதரர்கள் இழந்தது என்ன ?"

திரும்பிப் பார் - இழந்தது தெரியும்

காலம் கேட்டது
"கண்ணிரோடும் வியர்வையோடும்
எதற்காய் இத்தனை போராட்டம்
அடி மாட்டு விலைக்கு
அடிமையாய் ஒரு பயணம்
என்ன சாதித்தாய்?
பெற்ற சுதந்திரத்தை
காகிதத்திற்கு விற்றாய்
இத்தனை செய்தும்
நீ சேர்த்தது என்ன?
எங்கே பட்டியல் இடு..."

நானும் சொன்னேன்

"கத்தை கத்தையாய் பணம்
ஊரிலே சொந்த வீடு
சொந்தமாய் மோட்டார் வாகனம்
வசதியான வாழ்க்கை
வேறேன்ன வேண்டும் என்றேன் "

காலம் கேட்டது
நி இழந்ததை சொல்லட்டுமா என்று !
"சொல்" என்றேன்

"அன்னயின் பாசம்
தந்தையின் பரிவு
சாகோதரின் நேசம்
சகோதரயின் கனிவு
மனைவின் தனிமை
உன் குழந்தயின் சிரிப்பு
நட்பின் பரிசம்
இதோ உன் இளமையும் கூட..."

நான் இதை எப்படி மறந்தேன்
என்று யோசிக்க தொடங்க ...

காலம் சொன்னது

"இழந்தது ஒரு நொடியேனும்
அதை மீட்பது கடினம்"
"இனி யேனும் இழக்காமல் இரு"

யோசிப்பதில் இன்னும் ஒரு நொடியை இழந்துப் போனேன் !
எனக்கு செய்தி : "மகனே உனக்கு இப்படி ஒரு நிலை வரதுக்கு முன்னாடி ஊரை பொய் சேறு"