அம்மா ! இது வரை நான் உச்சரிக்காத வார்த்தை
பிறர் அழைக்க கேட்டிருக்கிறேன்
ஆனால் நான் அழைத்ததில்லை
எங்கிருக்கிறாய் நீ ?
பத்து மாதம் எதற்காக சுமந்தாய்?
என் முகம் பார்த்ததுண்டா ?
என் ஸ்பரிசம் உணர்ததுண்டா ?
நீ வெறுக்க நான் செய்த தவறென்ன ?
என் தொப்புள் கோடி
அறுக்கும் முன்னமே
நம் உறவுக்கொடி
அறுக்கப்பட்டது
விளைவு ...
நான் வீதியில் அனாதையாய்
பெண்ணாய் பிறந்தது யார் செய்த குற்றம் ?
எ முண்டாசுக் கவிஞ்சனே
மீண்டும் ஒரு ஜன்மம் எடு...
எங்களின் உரிமைக்காக!
குறிப்பு : தென் மாவட்டங்களில் கடந்த 4 வருடங்களில் 300 பெண் குழந்தைகள் தங்களுக்கு வேண்டாம் என்று பெற்றோர் நிராகரித்து அரசு தொட்டிலில் போட்டதாக செய்தி.