Tuesday, November 11, 2008

எழுத முயற்சிக்கிறேன்... தடுமாற்றத்துடன்

எனக்கு தெரியும் நான் நீந்த நினைப்பது குட்டையில் அல்ல கடலில் என்று... கடலின் ஒரு கரையில் இருந்து மறு கரையை அடைய ஓர் பயணம்.

எத்தனை வருட காதல் இது ...படித்ததோடு சரி, இதோ முதல் முதலாய் சுயமாய் ஓர் முயற்சி.

நான் கடைசியாய் தமிழில் எழுதியது இன்னும் என் நினைவில் இருக்கிறது, 2004ஆம் ஆண்டு அரேபிய மண்ணிலே விருபப்பட்ட அடிமையாய் விலைக்கு போனபின் உருக்கமாய் அம்மாவுக்கு எழுதிய கடிதம். அதன் பிறகு இதோ இந்த வலையில். நீண்ட வருடங்களுக்கு பிறகு என் தாய் மொழியில் எழுத எடுத்த இந்த முயற்சி எனக்குள் இனம் புரியாத ஓர் உணர்வை ஏற்படுத்தி இருகிறது (அம்மாவின் மடியில் தலைவைத்து படுபது ஓர் போல் ஓர் உணர்வு ).

எழுதி முடித்த இந்த பத்து வரிக்குள் ஒன்று மட்டும் தெளிவாய் புரிந்தது எழுதுவது சுலபம் அல்ல... (எத்தனை குழப்பம் எதை பற்றி? எப்படி? எழுதுவேன் என்று)

வலை பூவில் எழுத எனக்குள் இந்த தாக்கத்தை ஏர்படுத்திய அறிமுகம் இல்லா இனிய தோழர்களுக்கு என் நன்றி (tamizhini, காயத்ரி8782, saravanakumar msk... மற்றும் பலர்)

விடுவதில்லை...
கரை சேருவேன் என்ற நம்பிக்கையுடன் :-)

6 comments:

  1. வருக வருக... வாழ்த்துகள்... :))

    ReplyDelete
  2. வலை பூவில் என் வரவை வாழ்த்திய முதல் உள்ளம்...

    ஸ்ரீமதிக்கு என் மனம்மார்ந்த நன்றி

    ReplyDelete
  3. நானும் இரு கரம் கூப்பி வரவேற்கிறேன் :-)

    ReplyDelete
  4. //புனிதா said...
    நானும் இரு கரம் கூப்பி வரவேற்கிறேன் :-)//

    தமிழர் பண்பாடு.
    நன்றி தோழி

    ReplyDelete
  5. வாருங்கள் ஒன்றாய் கூடுங்கள் ...

    ReplyDelete
  6. எழுதுங்க எழுதுங்க தொடர்ந்து எழுதுங்க.........
    வாழ்த்துக்கள்.

    ReplyDelete

மறுமொழிகள்